இத்தாலி திலீபன் தமிழ்ச் சோலைகளில் நடைபெற்ற தியாக தீபம் லெப் கேணல் திலீபனுடைய 37 ஆவது நினைவு வணக்க நிகழ்வுகள்.

இத்தாலியில் பலெர்மோ, பியல்லா, செனோவா,நாப்போலி திலீபன் தமிழ்ச் சோலைகளில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களுடையதும், தமிழீழத்தின் வான்படைத் தளபதி கேணல் சங்கர் அவர்களுடையதும் வீரவணக்க நிகழ்வுகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு பிரதான ஈகைச்சுடரேற்றல் அகவணக்கத்தை தொடர்ந்து திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள், ஆசிரியர்கள் ,செயற்பாட்டாளர்கள் ,பொதுமக்களால் சுடர்வணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் கவிதைகள், பேச்சுக்கள், அபிநய நடனங்கள் இடம்பெற்றது.அனைத்து நகரங்களிலும் மக்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இறுதியில் தமிழரின் தாரக மந்திரமான “தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்” என்ற உறுதி மொழியுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

பலெர்மோ

பியல்லா

செனோவா

நாப்போலி

உங்கள் கவனத்திற்கு